ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டீல் குடிநீர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.
மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஆவின் சார்பில் 1லிட்டர் மற்றும் அரைலிட்டர் பாட்டீல்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவினுக்குச் சொந்தமான 28 பால் நிலையங்களிலும் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்படும். ஆவின் பால் நிலையங்களில் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் மூலம், பாட்டில் குடிநீர் தயாரித்து அவை விற்பனை செய்யப்படும்.
இதையும் படிக்க | தண்டோரா போடுவது இனி தேவையில்லை: ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு
மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசலிக்கப்படும். தற்போது பால் பாக்கெட்டுகள் மீது அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, சினிமா விளம்பரங்களையும் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்துள்ளார்.