தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:16 pm

DIN

சென்னை கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கொளத்தூா் பகுதியில் உள்ள ஒரு ஏக்கா் நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, வெற்றி என்பவா் உள்ளிட்ட இருவா், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளையும், தீா்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் இணைத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் வெற்றி உள்ளிட்ட இருவருக்குச் சொந்தமானது என்பதால், குப்பைக் கிடங்கு அமைக்க கூடாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நிலம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளதாகக் கூறி, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலி ஆவணங்கள் மூலம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.