27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கெங்கவல்லியில் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி      

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  4வது நினைவு நாளையொட்டி கெங்கவல்லி பேரூராட்சியில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

News image

கெங்கவல்லியில் கருணாநிதி நினைவு நாள் 

Updated On :7 ஆகஸ்ட் 2022, 2:20 pm IST

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  4வது நினைவு நாளையொட்டி கெங்கவல்லி பேரூராட்சியில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு நகர திமுக  செயலாளர் சு. பாலமுருகன்  தலைமை வகித்தார்.

அமைதி ஊர்வலம்  கடைவீதியில் தொடங்கி, கலைஞர் சிலை வரையில் நடைபெற்றது. அங்கு அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  

இதில் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் சு. லோகாம்பாள், துணைத்தலைவர்  மருதம்பாள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கவிதா சேகர், லதா மணிவேல், தங்கபாண்டியன், ஹம்சவர்தினி குமார், சையது, முருகேசன், அருண்குமார், சத்யா செந்தில், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், துணை செயலாளர் பாண்டியன், பொருளாளர் மூர்த்தி, நல்லதம்பி, செல்வகிளின்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தனசேகர், வெங்கடேஷ்,   மணி கலந்து கொண்டனர்.    

Story image

தம்மம்பட்டியில் நகர திமுக செயலாளர் விபிஆர்.ராஜா தலைமையிலும், தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவர் கவிதா விபிஆர்.ராஜா, துணை செயலாளர்கள் கலியவரதராஜ், பழனிமுத்து, கவுன்சிலர்கள் வரதன், ரமேஷ் உள்ளிட்டோர்  முன்னிலையிலும்,  செந்தாரப்பட்டி பேரூராட்சியில் நகர திமுக செயலாளர் எஸ்.பி.முருகேசன் தலைமையிலும், வீரகனூர் பேரூராட்சிப் பகுதியில்  நகர திமுக செயலாளர் பி.ஜி.அழகுவேல் தலைமையிலும், ஒதியத்தூர் ஊராட்சியில் திமுக செயலாளர் செல்வம் எஸ்.எஸ் தலைமையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள், பேரணிகள் நடைபெற்றன. இதில் திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.