அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு
Updated On :14 டிசம்பர் 2022, 12:22 pm

DIN

மதுரை: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த செல்வம் மின் விபத்தில் உயிரிழந்த தனது மகன் முத்துகிருஷ்ணனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மனுதாரரின் மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த 2014 ஆகஸ்ட் 10ஆம் தேதி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அருகில் விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த இரும்பு வேலியை தொட்டபோது மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளார்.

மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே தனது மகனின் இறப்புக்கு காரணம் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால்  மின்வாரியம் தரப்பில் மின் கம்பம் ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. இதில் மின்வாரியத்தின் அலட்சியம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தரப்பில் இது கடவுளின் செயல், நாங்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதே மின் விபத்து ஏற்பட்டு மனுதாரரின் மகன் உயிரிழக்கக் காரணம். ஆகவே மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி விஜயகுமார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.