மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 9,600 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, மாலையில் வினாடிக்கு 7,600 கன அடியாக குறைந்தது. நேற்று மாலை வினாடிக்கு 5600 கன அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.