அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் அறிவுறுத்தல்

கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :22 டிசம்பர் 2022, 12:32 pm

DIN

கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா வைரஸ்கள் குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. 

தமிழகத்தில் இதுவரை புதிய வகை கரோனா வைரஸ் இல்லை. மருந்துகள், பரிசோதனை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவை போதுமான அளவில் உள்ளன. 

பிஏ5 என்ற கரோனா தொற்று கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். மக்களைப் பாதுகாக்கக அரசு தயாராக உள்ளது' என்று பேசியுள்ளார். .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.