தொடர்ந்து உயர்ந்துவரும் தங்கம்: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது.


சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச. 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் படிப்படியாகக் குறைந்து நேற்று(டிச.20) ஒரு சவரன் தங்கம் ரூ. 40,520-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று(டிச. 22, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,992-க்கு விற்பனையாகிறது. இதன் மூலமாக 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,124-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70--க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...