/

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:42 pm IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடி உயரத்தை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,687.50 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை

ரூல் கர்வ் நடைமுறையின்படி அணையில் நீர்மட்டம் 142 அடி வரை மார்ச் 31 வரை தேக்கி கொள்ளலாம். 142 அடிக்கு மேல் நீர் மட்டம் உயருமானால் அணையின் மதகுகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற வேண்டும். அதன் பேரில் 142 அடி நீர் மட்டம் தற்போது எட்டியுள்ளது. நீர் வரத்து அணைக்குள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கீழ் பகுதியில் கரையோரம் வசிக்கும், கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள  வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  உபரிநீர் திறப்பதற்காக மூன்றாம் மற்றும்  இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 

இறுதி கட்ட எச்சரிக்கையை பெரியாறு அணையின் தேக்கடி நான்காவது பிரிவு அலுவலகத்தைத் சேர்ந்த உதவி பொறியாளர் பி.ராஜகோபால் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விடுத்தார்.

142 அடி உயரத்தை எட்டிய பின் அணைக்குள் நீர் வரத்து அதிகரிக்கும் நேரத்தில், அணையில் ரூல்கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை  உயரவிடாமல், அருகே உள்ள மதகுகளை திறந்து, உபரி நீர் கேரள பகுதியில் உள்ள இடுக்கி அணைக்கு செல்லுமாறு திறந்து விடப்படும் என்று தமிழக பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.