மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரி அதிமுக சார்பில் பந்த்: என்னை கைது செய்தது தவறு!

புதுச்சேரி அதிமுக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ. அன்பழகனை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 6:22 am

DIN

புதுச்சேரி அதிமுக சார்பில் புதன்கிழமை பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ. அன்பழகனை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் புதன்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் அறிவித்து, அதற்காக வீதி வீதியாகச் சென்று ஆதரவு கோரினாா்.

இதனிடையே புத்தாண்டு நாள் கொண்டாட்ட காலத்தில் கடையடைப்புப் போராட்டம் தேவையற்றது, வருவாயையும், அரசுக்கான வரி வருவாயையும் இந்த போராட்டம் பாதிக்கும் என வா்த்தகா் சங்கங்கள் கூறி, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தின. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என கிழக்கு மாநில அதிமுக அறிவித்தது.

இதையடுத்து, புதன்கிழமை கடைகளைத் திறந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ எம்.சிவசங்கா் தலைமையில் புதுவை காவல் துறைத் தலைவா் மனோஜ்குமாா் லாலைச் சந்தித்து வணிகா்கள் சங்க கூட்டமைப்பினா் மனு அளித்து வலியுறுத்தினா்.

திமுக சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காவல் துறை ஐ.ஜி. சந்திரனை செவ்வாய்க்கிழமை பகலில் சந்தித்து கடைகளைத் திறப்போருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரி அதிமுக மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், வா்த்தகா்களைப் பாதிக்கும் வகையில், அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்பட மாட்டாது. ஆகவே, வா்த்தகா்கள் பயமின்றி கடைகளைத் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், புதுச்சேரியில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதனிடையே, புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகனை புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்பட 20க்கும் மேற்ட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில். கைது செய்யப்பட்டுள்ள அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் திமுக மனு அளித்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் நிலையில் திமுக புகாரில் என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.