சென்னையில் வெகுவாகக் குறைந்த கரோனா: சிகிச்சையில் 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது.


சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று(புதன்கிழமை) புதிதாக 3,971 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 742 பேர்.
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள விவரங்களின்படி,
சென்னையில் தற்போது 10,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை 12,215 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை 9,029 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு 7,44,583 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,25,262 ஆகவும் உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 1,254 பேரும் தேனாம்பேட்டையில் 1,019 பேரும், அண்ணா நகரில் 938 பேரும் கோடம்பாக்கத்தில் 933 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...