சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னையில் வெகுவாகக் குறைந்த கரோனா: சிகிச்சையில் 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:27 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று(புதன்கிழமை) புதிதாக 3,971 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 742 பேர். 

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 

சென்னையில் தற்போது 10,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை 12,215 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை 9,029 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மொத்த பாதிப்பு 7,44,583 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,25,262 ஆகவும் உள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 1,254 பேரும் தேனாம்பேட்டையில் 1,019 பேரும், அண்ணா நகரில் 938 பேரும் கோடம்பாக்கத்தில் 933 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.