அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினி தொழில்நுட்பப் பயிற்சி:சென்னை ஐஐடி ஏற்பாடு

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில் நுட்ப மையங்களை சென்னை ஐஐடி ஏற்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினி தொழில்நுட்பப் பயிற்சி:சென்னை ஐஐடி ஏற்பாடு

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில் நுட்ப மையங்களை சென்னை ஐஐடி ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் ஊரக தொழில்நுட்ப மையம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை ஐஐடி- ‘பிரவா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மற்றும் ஆஷா பாா் எஜுகேஷன்’ அமைப்பு இதற்கான நிதியை வழங்கும்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியது: இந்தியாவில் கிராமப்புற மாணவா்களுக்கு தரமான கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கும் வகையில் சென்னை ஐஐடி பணியாற்றி வருகிறது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன நிரல் மொழியை கொண்டு ஆஷா பாா் எஜுகேஷன் அமைப்பு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வியைப் பயிற்றுவித்து வருகிறது. மாணவ, மாணவிகளின் நிலை மதிப்பீட்டின் அடிப்படையில், அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவு, அடிப்படை நிரல்மொழி ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அனிமேஷன், வலைப்பக்க வடிவமைப்பு, ட்ரோன்கள், 3டி பிரிண்டிங், ரோபோட்டிக்ஸ், மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com