சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வா் நாத் பண்டாரி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, முனீஷ்வா் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
இதைத்தொடர்ந்து தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார். தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.