மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கட்சி நிா்வாகியை தாக்கிய விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து

கட்சி நிா்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
ராஜேந்திர பாலாஜி
Updated On :11 பிப்ரவரி 2022, 9:06 pm

DIN

கட்சி நிா்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்தாண்டு செப்டம்பா் 24ஆம் தேதி விருதுநகா் மாவட்டம் சாத்தூருக்குச் சென்றபோது அதிமுகவினா் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை(பிப்.11)விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தச் சம்பவம் தொடா்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகாா்தாரரும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகினா்.

அப்போது சமரசம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும் உயா் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்குரைஞா்கள் நல நிதியத்திற்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டுமென மனுதாரா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.