எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் வீட்டில் சோதனை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பரும் மாநில கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பரும் கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படைகளை அமைத்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு தருவதற்காக பரிசுப் பொருள்களை இளங்கோவன் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com