முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த பேரவைத் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிக்க- தமிழ்நாடு இல்லத்தில் அதுல்ய மிஸ்ரா பொறுப்பேற்பு
இம்மனுவை ஏற்று கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடம்பூர் ராஜு தற்போது கோவிட்பட்டி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.