தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ, விருப்ப ஓய்வு பெற அனுமதி கோரியிருந்தாா். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றிய உறைவிட ஆணையா் பொறுப்பு காலியாக இருந்தது.
இந்தப் பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ராவை நியமித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அண்மையில் உத்தரவு பிற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.