அப்போது, பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது, அதுவும் தமிழ்நாட்டுக்குத்தான் பெருமை. தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர் பொறுப்புக்களில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உயர்கல்வியால் உயர்ந்தார்கள், உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள், அந்த நிலையை இன்னும் கூடுதலாக நாம் உயர்த்தவேண்டும்.
ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள், பட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நாம் புகுத்தவேண்டும். இதை நான் கடந்த மாதம் 25-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டுச் சொன்னேன்.