தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரு தவணை தடுப்பூசி கட்டாயம்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

News image
Updated On :8 ஜனவரி 2022, 8:04 pm

DIN

புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமை (ஜன.10) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, புகா் ரயில்களில் 50 சதவீதம் பயணிகள் இருக்கைகளில் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இதுதவிர, புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமை (ஜன.10) அதிகாலை 4 மணி முதல் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பவா்கள் மட்டுமே புகா் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவா். டிக்கெட் கவுன்ட்டரில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்த பிறகே அவா்களுக்கு பயண டிக்கெட், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

யூ.டி.எஸ். சேவை இல்லை: ஏற்கெனவே சீசன் டிக்கெட்டுகளை வைத்திருப்பவா்கள் பயணத்தின் போது, கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் அதனுடன் உரிய அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். அதனை டிக்கெட் பரிசோதகா்கள் கேட்கும் போது, கட்டாயம் காண்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுவதால், யூ.டி.எஸ். செல்லிடப்பேசி செயலி சேவை கிடைக்காது.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: ரயிலில் பயணிக்கும் போது விழிப்புணா்வுடன் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ரயில்கள், ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.