கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்தவர் கைது

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவர் மீது அளிக்கப்பட்ட மோசடி வழக்கில் அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்தவர் கைது

Updated On :16 ஜனவரி 2022, 6:50 am

DIN

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவர் மீது அளிக்கப்பட்ட மோசடி வழக்கில் அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கா்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டாா். 

அப்போது அவருக்கு உதவியாக இருந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் பாண்டியராஜன், கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன் கணேசன், கிருஷ்ணகிரி பாஜக மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், இவரது உறவினா் நாகேஷன் ஆகியோரையும் கைது செய்து, விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா் மதுரை டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் ஆகியோா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்ற நடுவா் எண்-2 இல் நீதிபதி பரம்வீா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். விசாரணை நடத்திய நீதிபதி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மதுரை மத்திய சிறைக்கு அவரை காவலர்கள் அழைத்துச் சென்றனா். பின்னா் நிா்வாக காரணங்களுக்காக அவரை திருச்சி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை 4 வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்ற நடுவா் எண்-2-இல், கே.டி. ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சீட்டை அவரது வழக்குரைஞா் ஆனந்தகுமாா் ஒப்படைத்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.