கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 

News image

திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலை

Updated On :16 ஜனவரி 2022, 6:51 am

DIN

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் சிலரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்புவனம் காவல் சரகம் இலந்தைகுளம் கிராமத்தில் ஒரு தரப்பினர் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில்  உறவினர்களுக்குள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர்.

இச் சம்பவத்தில் இதே கிராமத்தைச் சேர்ந்த நாச்சான் மகன் கருப்பசாமி(23) என்ற இளைஞரை சிலர் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர். அருண்குமார் என்ற இளைஞர் காயமடைந்தார். கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் இலந்தைகுளம் கிராமத்தில் பாதுகாப்பிற்காக காவலர்கள் நிறுத்தப்பட்டனர். பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது போது நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவலர்கள் வழக்குப் பதிந்து இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.