2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: போக்குவரத்துத்துறை 

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.   

News image
கோப்புப் படம்.
Updated On :3 ஜூலை 2022, 3:43 pm

DIN

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.  
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் இயக்கும் சாதாரண பயணக்கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமின்றி பயணிக்க கடந்த 8.5.2021 முதல் அனுமதிக்குமாறு மாநகரப் போக்குரத்துக்கழகம் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கையின் வழி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் பயணிக்க வரும்போது அவர்களிடம் மரியாதையின்றை நடத்துநர்கள் நடந்துக்கொள்வதாக புகார்கள் தலைமையகம் மற்றும் தலைமைச்செயலக போக்குவரத்து துறையில் அவ்வப்போது பெறப்படுகிறது. 

எனவே மகளிர் மாநகரப் போக்குரவத்துக்கழக பேருந்துகளில் எந்தவித பயண அட்டை இல்லாமலும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வரும்போது மாநகரப் போக்குவரத்துக்கழக அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் போக்குவரத்துத்துறையின் நிலையான இயக்க நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை வழி மீண்டும் உத்தரவிடப்படுகிறது. 
எனவே அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தத்தம் பணிமனை சார்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளை குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் ஆகியோறை பேருந்து பயணத்தின்போது மரியாதையுடனும், கனிவுடனும், மேற்குறிப்பிட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அவர்களை உரிய நிறுத்தத்தில் ஏற்றி/இறக்கிட அறிவுறுத்திடுமாறு இச்சுற்றறிக்கை வழி மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.