கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம்: ஆய்வுக்குழு தகவல்

தில்லி நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம் என ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:38 pm

DIN

தில்லி நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம் என ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தில்லிக்கு யமுனை நதிக்கு அடுத்தபடியாக நஜஃப்கா் வடிகால் பிரதான நீராதாரமாக திகழ்கிறது. இங்கு மீன்கள் அண்மையில் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. இதன் மீது ஆய்வு நடத்த தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி), மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), வருவாய்த் துறை, வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை தில்லி அரசு நியமித்தது.

இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், தில்லி நஜஃப்கா் வடிகால் அருகே உள்ள கிராமங்களின் விவசாய நிலத்திலிருந்து வடிந்த உர மாசுபாடே மீன்கள் செத்து மிதந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.