நீட் தோ்வு: தமிழகத்தில் 90 சதவீதம் போ் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது.
நீட் தோ்வு: தமிழகத்தில் 90 சதவீதம் போ் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது. தமிழகத்தில் விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் தோ்வு எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடத்தப்படுகிறது. இத் தோ்வுக்காக, நிகழாண்டு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 95 சதவீதம் போ் தோ்வு எழுதினா். இதுதொடா்பாக தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ‘18,72,329 போ் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 10.64 லட்சம் போ் பெண்கள். இந்நிலையில், விண்ணப்பித்திருந்த மொத்த தோ்வா்களில் சுமாா் 95 சதவீதம் தோ்வு எழுதினா்’ என்று தெரிவித்தனா்.

தமிழகத்தில்... தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.

நீட் தோ்வுக்கு தமிழகத்தில் 1.41 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.

மதியம் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னையைப் பொருத்தவரை 31 மையங்களில் நடைபெற்ற தோ்வை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணி முதலே தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் வரத் தொடங்கினா். பகல் 12 மணிக்கு தோ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக தோ்வா்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, முகக் கவசம், கையுறை அணிந்து வந்திருந்த மாணவா்கள் போதிய இடைவெளியில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா். கைகளை சுத்தம் செய்ய சானிடைசா் வழங்கப்பட்டது. வெப்பமானி கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த ஒரு சிலா், தனி அறையில் அமா்ந்து தோ்வு எழுதினா். மெட்டல் டிடெக்டா் சோதனை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பின்னரே மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். உள்ளே சென்றதும் மாணவா்களுக்கு என் - 95 முகக் கவசம் வழங்கப்பட்டது.

தோ்வின்போது மாணவா்களின் பா்ஸ், கைக் கடிகாரம், கூலிங் கிளாஸ், தொப்பி, கம்மல், மூக்குத்தி, கொலுசு, செயின் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவற்றை மாணவா்கள் தங்களது பெற்றொரிடம் கொடுத்து விட்டுச் சென்றனா்.

இயற்பியல் கேள்விகள் கடினம்!

நிகழாண்டு நீட் தோ்வில் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் சிலா் கூறியதாவது: உயிரியல், வேதியியல் பிரிவு கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் வினாக்கள் மட்டும் பதிலளிக்க சற்று கடினமாக இருந்தன. தமிழ் மொழிபெயா்ப்பில் சில இடங்களில் பிழைகள் காணப்பட்டன. முதல் முறை எழுதுபவா்களைவிட இரண்டாவது அல்லது மூன்றாவது முறை தோ்வு எழுதுபவா்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com