உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்: அப்பாவு

சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  தெரிவித்துள்ளார்.

அப்பாவு (கோப்புப்படம்)

Published On :

சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றம் மற்றும் இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு செஸ் போட்டி தொடக்கவிழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கொறடா வேலுமணி கொடுத்த கடிதத்தை இதுவரை பார்க்கவில்லை. சென்னை சென்று கடிதத்தை பார்த்துவிட்டு  முடிவு எடுக்கப்படும் என்றார். நீதிமன்றத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது குறித்து பதில் அளித்த அவர், நீதிமன்றம் வேறு, தேர்தல் ஆணையம் வேறு. அதற்கும் சட்டப்பேரவைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என தெரிவித்தார்.  

சட்டப் பேரவையில் இருக்கைகள் கொடுப்பது தொடர்பாக அதிமுக சார்பில்  கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது.  சட்டப்பேரவையின் மாண்பையும் மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.