குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “வாழ்வில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து, அத்தகைய நிலையிலும் சமூக பணிகள் செய்து, இன்று நம் பாரதத்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாபெரும் வெற்றியை உரித்தாக்கியுள்ள தேசத்தின் வரலாற்று தலைமகள் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவருக்கான தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட திரௌபதி முா்மு வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.