சென்னை: பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்கள் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழுபாடங்களையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அமைச்சர் பொன்முடி சுற்றறிக்கை விடுத்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலை. மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அரசு உத்திரவிட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் 31% இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் மற்றும் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை மட்டிமின்றி வேலைவாய்ப்பிலும் 69% இடஒதுக்கீடு பின்பற்ற தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு 39%, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1-9-க்கு வகுப்புகளுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


