மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'ஒற்றைத் தலைமை'.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழக்கம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று, தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
'ஒற்றைத் தலைமை'.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழக்கம்
Updated On :14 ஜூன் 2022, 7:41 am

DIN

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று, தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் சிலர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், கட்சியின் தலைவராக ஓபிஎஸ்தான் வர வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு நடத்தப்படுவதையொட்டி, மாவட்டச் செயலா்கள் கூட்டம்  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, கட்சியின் தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் ஆகியோா் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் எத்தகைய தீா்மானங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.