மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒற்றைத் தலைமை: இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மூத்த தலைவர்கள் தூது

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2022, 6:25 am

DIN


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் தற்போது இரட்டைத் தலைமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர எடப்பாடி கே. பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஓ. பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். வரும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கடந்த 4, 5 நாள்களாக தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை இன்றும் காலை முதல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தம்பிதுரை, பிறகு ஓ. பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்திய பிறகு ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவபதி, ஒற்றைத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல் தருவது அவருக்கு நல்லது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.