மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தவறுமேல் தவறு செய்கிறார் ஓ.பி.எஸ்.: ஜெயக்குமார் கண்டனம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

News image
ஜெயக்குமார் (கோப்புப் படம்)
Updated On :22 ஜூன் 2022, 7:21 am

DIN

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்டது. அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட வேண்டும். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற கவலையை ஓபிஎஸ் தரப்பினருக்கு சொல்லிக்கொள்கிறேன். அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்படி என்ன அராஜகம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார்.

சென்னையில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து நாளை தெரியவரும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.