ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்டது. அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட வேண்டும்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற கவலையை ஓபிஎஸ் தரப்பினருக்கு சொல்லிக்கொள்கிறேன். அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்படி என்ன அராஜகம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார்.
சென்னையில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து நாளை தெரியவரும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அஸ்ஸாமில் ஆண்டுக்கு ரூ.150 கோடி காங்கிரஸ் கொள்ளை! அமித் ஷா குற்றச்சாட்டு!

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

