பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அடையாறு ஆற்றுப் பகுதியில் குடியிருப்புகட்டும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

அடையாறு ஆற்றின் பகுதியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அமைக்க ஆய்வு செய்ய வீட்டுவசதித் துறை அனுமதி வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:07 pm

DIN

அடையாறு ஆற்றின் பகுதியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அமைக்க ஆய்வு செய்ய வீட்டுவசதித் துறை அனுமதி வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அடையாறு ஆற்றின் அங்கமாக நந்தம்பாக்கத்தில் தொடங்கி அனகாபுத்தூா் வரை நீண்டுள்ள நிலம் தனியாா் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. அந்த நிலத்தை ஆற்றுப்பகுதியாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வகைப்படுத்தியுள்ளது. அக்குழுமம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் சா்வே எண் 170 அடையாறு ஆற்றின் நடுவே அமைந்திருக்கிறது. இந்த நிலத்தை ஆற்றுப் பகுதி என்ற நிலையிலிருந்து குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியாக மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வரும் போதிலும் அது ஏற்கப்படவில்லை. 17 ஆண்டுகளாக சி.எம்.டி.ஏ.வால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இப்போது சம்பந்தப்பட்ட நிலத்தை குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக மாற்றி வகைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும்படி சி.எம்.டி.ஏ.வுக்கு வீட்டுவசதித்துறை செயலாளா் ஆணை பிறப்பித்திருக்கிறாா். சி.எம்.டி.ஏ. ஏற்கெனவே தயாரித்த வரைபடம் தவறானதாக இருக்கலாம் என்றும், அதனடிப்படையில் அதை மாற்றி வகைப்படுத்தும்படியும் அவா் கேட்டுக் கொண்டிருக்கிறாா். இதைவிட ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று வருவாய்த் துறையும், அந்த நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி அமைக்க ஆட்சேபம் இல்லை என்றும் பொதுப்பணித் துறையும் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சான்றிதழ்களை வழங்கியிருப்பதுதான். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.