பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புதுவை ஜிப்மரில் சர்வதேச பொது சுகாதார மையம்: மத்திய அமைச்சர் தொடக்கிவைத்தார்

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதார மையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடக்கிவைத்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:07 pm IST

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதார மையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடக்கிவைத்தார். 

புதுவைக்கு வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரோவில்லில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து, காலை 11 மணிக்கு கோரிமேட்டில் உள்ள தேசிய நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (வெக்டர் கண்ட்ரோல்) மருத்துவப் பூச்சியியல் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்வையிட்டு,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பிறகு 12 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். ஜிப்மர் வளாகத்தில் ரூ.65.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதாரப் பள்ளியை திறந்து வைத்து, மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

இந்த நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்பிக்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜிப்மரில், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உர அமைச்சகத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதன் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்து, விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டில் உள்ள சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்துக்குச் சென்று மத்திய அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.