மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது ஆதரவாளரும் அதிமுக நிர்வாகியுமான கோவை செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 ஜூன் 2022, 8:27 am

DIN


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது ஆதரவாளரும் அதிமுக நிர்வாகியுமான கோவை செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ்-இன் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது கனவாகத் தான் இருக்கும். 

பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் எந்த புகாரும் தரவில்லை. ஓபிஎஸ் தில்லி சென்றது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்  திரௌபதி முர்முவை ஆதரிக்கத்தான். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நாட்டாவின் வேண்டுகோளை ஏற்று, குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதற்காக தில்லி சென்று வேட்புமனுத் தாக்கல் நிகழ்விலும் கலந்துகொண்டார். 

இன்று பிற்பகல் அவர் சென்னை வருகிறார். வந்தபிறகு அவர் துணிந்து சில முடிவுகளை எடுப்பார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்' என்றார். 

முன்னதாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.