சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு பிளஸ் 1 வகுப்புகள் நாளை(திங்கள்கிழமை) ஜூன் 27 முதல் தொடங்குகின்றன.
கோடை விடுமுறைக்கு பின், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்புக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று புதிதாக பிளஸ் 1-இல் சோ்ந்த மாணவா்களுக்கு வகுப்புகள் நாளை(திங்கள்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
இதையடுத்து, பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு முதல் இரண்டு நாள்கள் புத்துணா்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.