அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போடி நகர்மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு

போடி நகர்மன்ற தலைவராக ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

News image
போடி நகர்மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
Updated On :4 மார்ச் 2022, 7:49 am

DIN


போடி: போடி நகர்மன்ற தலைவராக ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

போடி நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் போடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் 21 ஆவது வார்டு உறுப்பினர் ச.ராஜராஜேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். நகராட்சி ஆணையாளர் தி.சகிலா வேட்பு மனு பெற்றார். 

போடி நகராட்சி நகர்மன்ற தேர்தலில் ச.ராஜராஜேஸ்வரி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

நகர்மன்ற தேர்தலின்போது தி.மு.க. உறுப்பினர்கள் 20 பேர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தலா ஒருவர் என 22 பேர் மட்டும் பங்கேற்றனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் 9 பேர், பா.ஜ.க. வேட்பாளர்கள் 2 பேர் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ச.ராஜராஜேஸ்வரி நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் தி.சகிலா மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க.தமிழ்செல்வன், போடி நகர தி.மு.க. செயலர் மா.வீ.செல்வராஜ், முன்னாள் செயலர் ராஜா ரமேஷ், தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் போடி பகுதியில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கண்ணன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த திருப்பதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.