விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எடப்பாடி நகர மன்ற தலைவராக திமுக உறுப்பினர் டி.எம்.எஸ்.பாஷா தேர்வு

எடப்பாடி நகராட்சிக்கான நகரமன்ற தலைவர் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், நகரமன்ற தலைவர் பதவியில் முன்னுரிமை வேண்டி ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

திமுக உறுப்பினர் டி.எம்.எஸ்.பாஷா

Updated On :4 மார்ச் 2022, 7:50 am

DIN


எடப்பாடி: எடப்பாடி நகராட்சிக்கான நகரமன்ற தலைவர் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், நகரமன்ற தலைவர் பதவியில் முன்னுரிமை வேண்டி ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எடப்பாடி நகராட்சி கடந்த 1965ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாரிமுத்து பக்தர் தொடர்ந்து மூன்று முறையும் அவரைத் தொடர்ந்து அவரது மகன் இருசப்ப மேத்தா மூன்று முறையும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்தனர். 

இதனைத்தொடர்ந்து 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.கதிரேசன் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்ற நகர மன்றத் தலைவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் (மீனவர்). எனவே தற்போது திமுக- 16, அதிமுக-13, காங்கிரஸ் - 1 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நகர மன்ற உறுப்பினருக்கு நகர மன்றத் தலைவர் பொறுப்பு வழங்கிடகோரி அச்சமூகத்தைச் சார்ந்த திரளானோர் இன்று (வெள்ளிகிழமை) திமுக நகர செயலாளர் டி.எம்.எஸ்.பாஷா வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எடப்பாடி நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் பலர் முன்னிலையில் நடைபெற்ற நகரமன்ற தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.எஸ்.பாஷா  17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் ஏ.எம்.முருகன் 13 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.பாஷா  எடப்பாடி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.