இதனைத்தொடர்ந்து 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.கதிரேசன் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்ற நகர மன்றத் தலைவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் (மீனவர்). எனவே தற்போது திமுக- 16, அதிமுக-13, காங்கிரஸ் - 1 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நகர மன்ற உறுப்பினருக்கு நகர மன்றத் தலைவர் பொறுப்பு வழங்கிடகோரி அச்சமூகத்தைச் சார்ந்த திரளானோர் இன்று (வெள்ளிகிழமை) திமுக நகர செயலாளர் டி.எம்.எஸ்.பாஷா வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.