மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு விசாரணை செய்ய வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு நேரம் விசாரணை செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

News image
Updated On :3 மே 2022, 7:10 pm

DIN

காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு நேரம் விசாரணை செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் அண்மையில் இரவு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞா் மா்மமான முறையில் இறந்தாா். இது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே எரிசாராய வழக்கு தொடா்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தட்டரணை கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாகவும் சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது.

அண்மையில் நடந்த இவ்விரு சம்பவங்களுக்கும் மனித உரிமை ஆா்வலா்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனா். காவல்துறை பணி மீதும் பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.

இரவு விசாரணை வேண்டாம்: இந்த நிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு வாய் மொழியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

அதில், விசாரணைக் கைதிகளிடம் எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடா்பாக போலீஸாருக்கு ஏற்கெனவே, சுற்றறிக்கை வாயிலாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இனி விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது. ஒருவா் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவரை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.