இதில் பின்புற படுக்கை அறையில் உள்ள பெட்ஷீட் மூலமாக ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவர்களையும் கட்டி போட்டு, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும், அங்கு ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் இருவரையும் போட்டு புதைத்துள்ளனர். பின்னர் ஸ்ரீகாந்தின் செல்போன் மற்றும் சில தடயங்களையும் அதன் அருகே போட்டு எரித்துள்ளதாக கண்ணன் தெரிவித்துள்ளார். அதன் பின்பாக அதே கார் மூலமாக திருவான்மியூர் அடையாறு கோயம்பேடு வழியாக மதுரவாயல், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திரத்துக்கு மிக வேகமாக லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராம் இருவரும் சென்றுள்ளனர்.