பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மும்முனை மின்சார இணைப்புக்கு லஞ்சம்:  இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை

மும்முனை மின்சார இணைப்புக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

News image
Updated On :25 மே 2022, 7:16 am

திருவள்ளூர்: மும்முனை மின்சார இணைப்புக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை முகப்பேரில் உள்ள வேணுகோபால் தெருவைச் சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த, 2011-இல் தனது வீட்டிற்கு மும்முனை மின்சாரம் இணைப்பு கோரி, அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளரான மணி என்பவர், ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். கையூட்டு கொடுக்க விரும்பாத அரிதாஸ், இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் செய்தார்.  

கடந்த, 2011-இல் ஜன.31 ஆம் தேதி, அரிதாஸிடம், இளநிலை பொறியாளர் மணி, கையூட்டு பெற்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இறுதி விசாரணை புதன்கிழமை நீதிபதி வேலரசு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்குரைஞர் வி.அமுதா ஆஜராகி வாதாடினார். அப்போது, குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் பொறியாளர் மணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.