குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தேனி மாவட்டம், கம்பம் அருள்மிகு பகவதியம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.

News image

இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

Updated On :2 நவம்பர் 2022, 2:44 pm IST


கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருள்மிகு பகவதியம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன்  கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி  வைத்தார்.

தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் பந்தயத்தில் மாட்டு வண்டிகள்  126-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. 

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி  உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேவாரம், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

ஏற்பாடுகளை கம்பம் காமுகுல ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.