கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் வெள்ளிக்கிழமை குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை அணை பகுதியில் மழை பெய்யவில்லை.
அதே நேரத்தில் தேனி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிமாக இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,308 கன அடி சென்றது.
இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வியாழக்கிழமை வினாடிக்கு, 1,667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு, 511 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் குறைவாக வெளியேற்றப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது. ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அணை நிலவரம்: நீர்மட்டம், 134.25 அடி(மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 5691 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 763.03 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


