கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் வெள்ளிக்கிழமை குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை அணை பகுதியில் மழை பெய்யவில்லை.
அதே நேரத்தில் தேனி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிமாக இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,308 கன அடி சென்றது.
இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வியாழக்கிழமை வினாடிக்கு, 1,667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு, 511 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் குறைவாக வெளியேற்றப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது. ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அணை நிலவரம்: நீர்மட்டம், 134.25 அடி(மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 5691 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 763.03 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன, மஞ்சளில் ஈயமா? எப்படி சேர்கிறது? என்ன பாதிப்புகள் ஏற்படும்?

ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா: சூரி, விமல் ஒயிலாட்டத்தில் அசத்தல்!

4 வயது குழந்தைக்குத் தாய், பிஎச்டி ஆய்வு... காமன்வெல்த் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற சீமா!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம்! தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் | BJP
விடியோக்கள்

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டம்!



