மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி இறந்தது

3 பேரை கடித்து காயப்படுத்தியதால், மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி இறந்தது. 

News image
களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டு இறந்த கரடியின் உடலுக்கு எரியூட்டிய வனத்துறையினர். 
Updated On :8 நவம்பர் 2022, 10:51 am

DIN

களக்காடு: தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கடித்துக் காயப்படுத்தியதால், வனத்துறையினரால் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி திங்கள்கிழமை இறந்த நிலையில் கரடியின் உடலுக்கு வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை எரியூட்டினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் சரகத்துக்கு உள்பட்டது பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு. ஞாயிற்றுக்கிழமை (நவ.6) காலை கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த வைகுண்டமணி (55) என்பவர் பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில் உள்ள கடைகளுக்கு மசாலாப் பொருள்கள் கொண்டு சென்றார். அப்போது, கிராம எல்லையில் சாலையோரம் மறைந்திருந்த கரடி, அவர் மீது பாய்ந்து தாக்கியது.

மேலும், அங்கு வந்து கரடியை விரட்டிய அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சாத்து மகன்களான நாகேந்திரன் (64), சைலப்பன் (54) ஆகியோரையும் கரடி தாக்கியது. தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் கடையம் வனத்துறையினருடன் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கரடியை சுட்டுப்பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, துணை இயக்குநர் செண்பகப்ரியா உத்தரவின்பேரில், வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் கரடியைப் பிடிக்கும் பணி நடைபெற்றது.

ராமையன்பட்டி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை மருத்துவர் சிவமுத்து, வனத்துறை கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் அடங்கிய குழுவினர் மயக்க ஊசி செலுத்தி, கரடியை பிடித்தனர்.

பின்னர் அந்த கரடி ஞாயிற்றுக்கிழமை இரவு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டம், களக்காடு சரணாலயம், முத்தலாறு சரகத்தில் விடப்பட்டு, வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், திடீரென திங்கள்கிழமை பிற்பகல் கரடி இறந்தது. இதையடுத்து, கரடியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பின் தலையணையில் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை எரியூட்டினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.