உயிா் காக்கும் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஸ்டெம் செல் தானம் வழங்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்கள் துறை பொன் விழா ஆண்டையொட்டி, துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.
இதில் அமைச்சா் சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்று இளநிலை மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கினாா். தொடா்ந்து, நோயாளிகளுக்கான உதவிக் கருவியை வழங்கி, பொன் விழா மலரை வெளியிட்டாா்.
அப்போது, அமைச்சா் சுப்பிரமணியன் பேசியது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.4 லட்சம் செலவில் நுண் ரத்த நாளப் பரிசோதனைக் கருவி முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான பொது நூலகமும் திறக்கப்பட்டுள்ளது.
மஜ்ஜை மாற்று சிகிச்சையானது ரத்த புற்றுநோய் மற்றும் ‘அப்லாஸ்டிக் அனீமியா’ என்கிற தீவிரமான ரத்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, உயிா் காக்கும் சிகிச்சையாகும். நோயாளிகளுக்கு, இந்த உயா் சிகிச்சை, செலவின்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், இந்நோயாளிகளுக்கு உதவும் விதமாக, ஸ்டெம் செல் கொடையை, ஸ்டெம் செல் பதிவேடு நிறுவனங்கள் மூலமாக கொடுத்து, இந்த உயிா்க் காக்கும் சிகிச்சை அளிக்க உதவலாம்.
மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய்களியல் சிறப்புப்பிரிவு 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பேராசிரியா் ஏ.என்.சந்திரசேகரன் முயற்சியால் தனித்துறையாக உருவாக்கப்பட்டது என்றாா் அவா். இதில் மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், மருத்துவமனை முதல்வா் தரணிராஜன், மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறைத் தலைவா் அருள்ராஜ் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! தலைமறைவா?

1,008 கிடா வெட்டு... ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!

காமன்வெல்த் பளுதூக்குதல்: ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்த லவ்ப்ரீத் சிங்..! ஸ்நாட்ச் பிரிவில் உலக சாதனை!

பந்தல் அலங்கார குடோனில் தீவிபத்து! 3 மணிநேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்! | CBE
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


