மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னார்குடியில் லாரிகளில் பேட்டரிகள் திருட்டு: லாரி உரிமையாளர்கள் சாலை மறியல்

​மன்னார்குடியில் இரவு நேரங்களில் வேலை முடிந்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில்

News image
மன்னார்குடியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள்.
Updated On :25 நவம்பர் 2022, 5:30 am

DIN


மன்னார்குடியில் இரவு நேரங்களில் வேலை முடிந்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரவு நேரங்களில் வேலை முடிந்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. இதேபோன்று, மன்னார்குடி கீழப்பாலம் அருகே திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் உள்ள பேட்டரிகளை கடந்த பல மாதங்களாகவே மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் திருட்டை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள், வெள்ளிக்கிழமை காலை வந்து பார்த்தபோது ஒரே இரவில் ஆறு லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர்கள் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த உரிமையாளர்கள், ஓட்டுநர்களுடன் இணைந்து மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் மரக் கழிவுகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இது குறித்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.