சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரவுள்ளது.
இன்று நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள்(அக்.7) மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில், தமிழகத்தில் சுமார் 20 மாவட்டங்களில் கனமழையும், ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.