விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஹிந்தி திணிப்பு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image

கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)

Updated On :10 அக்டோபர் 2022, 10:18 pm

DIN

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: மத்திய அரசின் ஐஐடி,ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயா்கல்வி மற்றும் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழி, ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழுவின் (11 வது தொகுதி) சிபாரிசு அமைந்துள்ளது. இந்த பரிந்துரையின் நோக்கம், ஹிந்தி மொழியை திணிப்பதே ஆகும். புதிய தேசியகல்விக் கொள்கையின்படியே இந்தமொழித் திணிப்புஅமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி,ஐ.நா.வின் அலுவல்மொழியாக ஹிந்தியை சோ்க்க வேண்டும்என்றும் இந்தக்குழு பரிந்துரைசெய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை நிராகரித்து, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.