இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஒசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த எம்.எஸ்.தோனி!

ஒசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி

News image
Updated On :10 அக்டோபர் 2022, 5:03 pm IST

ஒசூர்: ஒசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்று தொடக்கிவைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சிப் பிரிவின் சூப்பர் கிங்ஸ் அகாதெமியுடன் பள்ளி தனது அதிகாரப்பூர்வமான இணைப்பை அறிவித்து, பள்ளி நேரத்திற்குப் பின் அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதனை தொடக்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் பங்கேற்றார்.

இதில் 1,800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தோனி தொடங்கி வைத்தார். 1,000 ஆசிரியர்களைக் கொண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட்டுடன், பெங்களுரூவில் உள்ள எம்.எஸ். தோனி குளோபல் பயிற்சி நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில்  எம்.எஸ். தோனி குளோபல் பள்ளியின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.