அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மூன்று பாலங்கள்

தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மூன்று பாலங்கள்
Updated On :14 அக்டோபர் 2022, 8:57 am

DIN

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.10.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 58 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்பாலம் ஆகிய மூன்று பாலங்களை திறந்து வைத்தார்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில்,  வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு,  நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 38-க்கு மாற்றாக பழைய தேசிய நெடுஞ்சாலை – 7ல், அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; 

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேச்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 15-க்கு மாற்றாக தொளசம்பட்டி சாலையில், 688.8 மீட்டர் நீளத்திற்கு 18 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;

பருவ மழை காலங்களில் பெண்ணையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டும், பரசுரெட்டிபாளையம், மடுகரை, பூவரசங்குப்பம், பட்டாம்பாக்கம், சொர்ணாவூர், மாளிகைமேடு, கோழிப்பாக்கம், புலவனூர் மற்றும் கொங்கராயனூர் கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் விழுப்புரம் மாவட்டம், மேட்டுப்பாளையத்தையும் கடலூர் மாவட்டம், மேல்குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளத்திற்கு 27 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்; என மொத்தம் 58 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று பாலங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.