பாஜக ஆட்சிக்கு வந்ததே ஹிந்தியை திணிப்பதற்காகவே: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே ஹிந்தியை திணிப்பதற்காக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே ஹிந்தியை திணிப்பதற்காக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள், அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கூடாது. அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக்கொள்கை தீர்மானத்துக்கு எதிராக நாடளுமன்றக்குழு பரிந்துரைகள் உள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே ஹிந்தியை திணிப்பதற்காக உள்ளது. மத்திய அரசின் இதயம் ஹிந்திக்காகவே துடிக்கிறது.

அனைத்து இந்திய தேர்வுகளையும் ஹிந்தி மயமாக்க துடிக்கிறார்கள் எனவும், ஹிந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணி பெற முடியாத வகையில் ஹிந்தி மொழி திணிப்பு உள்ளது.

தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com