திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மனைவியைக் கொன்று குப்பையில் வீசிய கணவன் கைது

கடலூர் அருகே புத்தூர் பகுதியில் மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2022, 3:53 pm IST

கடலூர் அருகே புத்தூர் பகுதியில் மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி மனைவி உஷாவை காணவில்லை என கூடலூர் காவல் நிலையத்தில் கணவன் மோகன் புகார் அளித்தார். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து உஷாவை தேடிவந்த காவல்துறையினருக்கு மோகன் உதவி செய்வதுபோல் நாடகமாடி வந்துள்ளார்.

கணவன் மோகனிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தீவிர விசாரணையில் மனைவி உஷாவை கொலை செய்து குப்பைகளை கொட்டும் இடத்தில் மோகன் வீசியது  தெரியவந்துள்ளது. குப்பையில் கிடந்த உஷாவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகனை காவல்துறை கைது செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.