தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோயம்பேடு பிரதான சாலை, அண்ணாசாலை, பெரியார் சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.
தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை நாளை (அக்.24) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டிய விடுமுறை தினத்தால், சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய வார இறுதி விடுமுறையால் ( சனி, ஞாயிறுக் கிழமை) முன்கூட்டியே பலர் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
பேருந்துகள், ரயில்கள் மூலமாக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தியாகராய நகர், புரசைவாக்கம் போன்ற முக்கிய கடைவீதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. எனினும், சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


